தங்கத்துரை, குட்டிமணியின் உடல்கள் புதைத்த இடங்களை வெளிப்படுத்துக! செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை



வெலிக்கடை சிறைப் படுகொலையின்போது கொல்லப்பட்ட எமது தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டன என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். -இவ்வாறு நேற்று வியாழக்கிழமை பாராளு மன்றத்தில் உரையாற்றிய ரெலோ இயக்கத்தின் தலைவரும் எம். பியுமான செல்வம் அடைக்கல நாதன் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன், 1983 ஜூலை இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரே தமிழீழ விடு தலை இயக்கம் (ரெலோ) உருவாவதற்கு மூலகாரணமாக இருந்தனர். 1983 ஜூலை 11கலவரத்தின் ஓர் அம்சமாக வெலிக்கடை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை சிங்கள கைதிகள் கொடூரமாக தாக்கிக் கொல்லப்பட்டனர். குட்டிமணி உயிருடன் இருக்கும்போதே அவரின் கண்களை தோண்டி சிங்கள கைதிகள் எறிந்து குரூரம் புரிந்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
