இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டகளப்பில் தற்போது இடம்பெறுகின்றது






இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டகளப்பில் தற்போது இடம்பெறுகின்றது.
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று(16-02-2025) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இடம்பெறுகின்றது.
களுவாஞ்சிகுடியில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இந்த மத்தியகுழு கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட பல மத்தியகுழு உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது உயிரிழந்த தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பதில் தலைவர் தலைமையில் கூட்டம் ஆரம்பமானதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
