கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சைக்கு 5000 நோயாளிகள் 2028ஆம் ஆண்டு வரை காத்திருப்பு. மருத்துவர் சங்கம் தெரிவிப்பு.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஐயாயிரம் நோயாளிகள் 2028ஆம் ஆண்டு வரை காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர் என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவ மனையின் ஐந்து பிரதான விடு திகளில் இருதய சத்திரசிகிச்சை நிபுணர்களால் மேற்கொள்ளப் படவுள்ள இந்த சத்திரசிகிச்சைகள் தாமதமாவதால் பல நோயாளிகள் இறக்கும் நிலையும் அதிகமுள்ளது என்று மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ கூறியுள்ளார்.
இதய அறுவை சிகிச்சைக்காக தற்போதுள்ள வரிசையை முடிவுக்குக் கொண்டுவர குறைந்தது நான்கு ஆண்டுகள் ஆகும். இதுபோன்று நேரம் கடந்தால், பல நோயாளிகள் உயிரிழக்க நேரிடும். தற்போதைய சூழ்நிலையில் இதய நோயாளிகள் அறுவை சிகிச் சைக்காக தனியாருக்கு செல் லும்போது பெரும் தொகையை செலுத்த வேண்டியிருப்பதால், காத்திருப்போர் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மற்றும் தேவைப்படுபவர்களுக்கு அரசு உதவி வழங்க வேண்டும்.
இல்லாவிடின் விசேட நோய்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மருத்துவ காப்புறுதி முறையை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது இன்றியமையாததாக இருக்கும் என்றும் மருத்துவர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
