
இலங்கை உப்பு இறக்குமதியை ஆரம்பித்துள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய அடுத்த வாரமளவில் 15,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய முடியுமென கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் சமிலா இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடமிருந்து உப்பு இறக்குமதியை மேற்கொள்வதற்காக 2 இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இந்த இறக்குமதி உப்பை தொழிற்றுறையினருக்கு விநியோகிக்கவுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்காக அண்மையில் விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
