



500 நாள்களுக்கு பின் சொந்த நாட்டுக்கு திரும்பினார்கள் தாய்லாந்து பிரஜைகள்
ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்ட ஐந்து தாய்லாந்து பிரஜைகள் சுமார் 500 நாள்களுக்கு பின்னர் தமது சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023 ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலின்போது, இஸ்ரேலில் பண்ணையொன்றில் பணியாற்றி வந்திருந்த இந்த ஐவரும் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி 30 ஆம் திகதி இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அதற்கமைய, குறித்த தாய்லாந்து பிரஜைகள் ஐவரும் இன்று காலை பேங்கொக் சுவர்ணபூமி விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.
மேற்படி ஐந்து பேரும் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் குழு மற்றும் அவர்களது உறவினர்களால் வரவேற்கப்பட்டனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
