லெபனானில் தொலைத் தொடர்பு கருவி (பேஜர்கள்) வெடித்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர். மேலும் 2 ஆயிரத்து 750 பேர் காயமடைந்தனர்.




லெபனானில் தொலைத் தொடர்பு கருவி (பேஜர்கள்) வெடித்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர். மேலும் 2 ஆயிரத்து 750 பேர் காயமடைந்தனர்.
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா போராளிகளும் இஸ்ரேல் மீது ஏவுகணை, ரொக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால், இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள லெபனானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ஹிஸ் புல்லா போராளிகளின் தாக்குதலால் இஸ்ரேலின் வடக்கு எல்லையில் வசித்து வந்த மக்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந் துள்ளனர்.
இதனிடையே, இடம்பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் வடக்குப் பகுதியில் குடியமர்த்துவதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.
இராணுவ நடவடிக்கை மூலம் வடக்கு எல்லை பகுதியில் அமைதியை நிலைநாட்டி மக்களை குடியமர்த்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இதனால் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவா கியுள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை ஒரேநேரத்தில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பயன்படுத்தி வரும் பேஜர்கள் வெடித்தன. இதனால் ஒட்டு மொத்த லெபனானும் அச்சத்தில் உறைந்துள்ளது.
பேஜர் என்பது தகவல் தொடர்பு கருவியாகும். இந்தக் கருவியை ஹேக் செய்வது மிகவும் கடினமானது.
தொலைபேசிகளை ஹேக் செய்து இருப்பிடம், தகவல்களை இஸ்ரேல் கைப்பற்றிவிடும் என்று கருதிய ஹிஸ்புல்லா போராளிகள் பேஜர்களை பயன்படுத்தி வரு கின்றனர்.
போராளிகள் தவிர அரசு அதிகாரிகள் உட்பட மேலும் சிலரும் இந்த பேஜரை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் லெபனான் முழுவதும் பேஜர்கள் மர்மமான முறையில் வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 ஆயிரத்து 750 பேர் படுகாயமடைந்தனர். இதில், 200இற்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பேஜர் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
