இலங்கை நீதி, பொறுப்பு கூறலில் பணியாற்ற எதிர்பார்க்கிறோம் - அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக் தெரிவிப்பு
11 months ago
இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முக்கியமான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதை மையப்படுத்தி தொடர்ந்தும் பணியாற்ற எதிர்பார்க்கின்றோம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கை சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை - இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதிக்கழகத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி நிஷா பிஸ்வாலை சந்தித்தும் உரையாடியுள்ளார்.
அதில் கொழும்புத்துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 553 மில்லியன் டொலர் நிதி உதவியை செயற்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
