இந்திய இழுவைமடி மீன்பிடிப் படகுகளின் அத்துமீறல் காரணமாக 700 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்கள் வடக்குக் கடற்பரப்பில் மீண்டும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவரும் நிலையில், அத்துமீறிய மீன்பிடிக்காக கடந்த இரண்டு வாரங்களில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகு மோதி ஸ்ரீலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததையடுத்து இந்த விடயங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் பூதாகரமான விடயங் களாக மாற்றம் பெற்றுள்ள நிலையி லேயே, அத்துமீறிய மீன்பிடி தொடர் பான பாதிப்புகளை இந்திய அரசாங்கத்துக்கு இலங்கை தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பான மேலும் சில விடயங்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
