வடக்கு - கிழக்கில் உள்ள இளம் கடற்றொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கை எடுப்போம் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு.





வடக்கு - கிழக்கில் உள்ள இளம் கடற்றொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கை எடுப்போம் என மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ கூறியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது.
வடக்கு - கிழக்கு இளம் கடற்றொழிலாளர் கூட்டு எனும் புதிய அமைப்பின் மூலம் யாழ்ப்பாணத்தில் கூட்டு கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளோம்.
இந்தக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய 7 மாவட்டங்களில் இருந்தும் இளையோர் சமூகமளித்தனர்.
அனைவரையும் ஒன்றிணைத்து மிகவும் பெறுமதியான கூட்டு கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அடுத்த கட்ட தலைமுறையினர் எவ்வாறு கடல் வளத்தினையும், கடற்றொழிலாளர்களின் உரிமைகளையும் அவர்களின் பாதுகாப்பையும் கடற்றொழில் சொத்துக்களையும் முன்னெடுத்துச் செல்வது குறித்து இதன்போது கலந்துரையாடியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
