வடமாகாண ஆளுநரை இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி சந்தித்து கலந்துரையாடினார்.

5 months ago



வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை இலங்கைக் கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க(Thushara Karunatunga) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பானது இன்று (18)ஆளுநர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது யாழ். தீவுப் பகுதி மக்களின் கடல் போக்குவரத்து மற்றும் தீவுகளில் வசிக்கும் மக்களுக்கான வசதி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைக் கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகளின் முக்கியத்துவம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.