

முல்லைத்தீவில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு - நெத்தலியாறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கையை மூன்று காட்டு யானைகள் தினமும் இரவு வேலைகளில் சேதப்படுத்தி வருகின்றன.
தற்போது, வெள்ளம் வடிந்து வரும் நிலையில், யானைகள் தொடர்ச்சியாக நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
வெள்ளம் காரணமாக அப்பகுதிக்கு இரவு வேளைகளில் காவலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.
விதைப்பு மேற்கொள்ளப் பட்டு 40 நாட்கள் கடந்த நிலையில் உள்ள வயல்களை யானைகள் மிதித்து துவம்சம் செய்து வருவதுடன் அப் பயிர்களை மேய்ந்து வருவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலை ஒவ்வொரு வருடமும் தொடர்வதாகவும் நெற்செய்கை மேற்கொள்ளும் தமக்கு அழிவுகளே அதிகமாக ஏற்படுவதாகவும் உரிய நஷ்ட ஈடு வழங்கப்படுவதில்லை எனவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
