தடுப்பூசிகள் கொள்வனவு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்
பக்டீரியா தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் மெரொபெனம் தடுப்பூசி போதுமான அளவு கையிருப்பில் இருக்கும் நிலையில் அவசர கொள்முதல் முறையின் மூலம் 4 இலட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டன.
இதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
மெரொபெனம் தடுப்பூசி கொள்வனவு மூலம் நாட்டுக்கு 36 கோடியே 89 இலட்சத்து 50,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஒரு குப்பி 1075. 68 ரூபாய்க்கு கிடைத்தும் 1895, 50 ரூபாய்க்கு கொள்வனவு செய்துள்ளனர்

இதனால், நாடு நஷ்டத்தை சந்தித்துள்ளது.
எனவே, இந்த அவசர கொள்முதல் தொடர்பாக முறையான அறிக்கையை வெளியிட்டு விளக்கமளிக்க வேண்டும்.
அத்துடன், இந்தத் தடுப்பூசி விநியோகஸ்தர் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணையத்திடமிருந்து பதிவுச் சான்றிதழைப் பெற்று, குறுகிய காலத்துக்குள் அவசர கொள்முதல் மூலம் இந்த மோசடியை செய்திருப்பதால், இது தொடர்பாக அறிக்கையொன்றை சபையில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
