கனடாவின் மேற்குப் பகுதிகளில் அதிகளவு குளிர் நிலவும் என வளிமண்ட திணைக்களம் எதிர்வு கூறியது

கனடாவில் குளிர்காலம் தொடர்பில் அந்நாட்டு வளிமண்ட திணைக்களம் எதிர்வு கூறல்களை வெளியிட்டுள்ளது.
புதிய பருவ மாற்றம் தொடர்பில் கனடிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதம வானியல் ஆய்வாளர் கிரிஸ் ஸ்கொட் எதிர்வு கூறல்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு குளிர் பருவ நிலையில் நிலவியதை விடவும் இம்முறை கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு குளிர்காலத்தில் ஓரளவு வெப்பநிலை நீடித்து வந்தது எனினும் இம்முறை அந்த பருவ நிலையில் மாற்றத்தை அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் மேற்கு பகுதிகளில் அதிக அளவு குளிர் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இம்முறை கிறிஸ்மஸ் காலத்தில் அதிகளவு பனிப்பொழிவு ஏற்படுமா என்பது குறித்து இப்போதைக்கு எதிர்வுகூற முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் காலத்தில் வென்பனிப் படலம் படரும் சந்தர்ப்பங்களை மரபு ரீதியாக வைட் கிறிஸ்மஸ் என அடையாளப்படுத்துகின்றனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
