இலங்கையில் முன்னெடுக்க இருந்த காற்றலை மின்திட்டத்திலிருந்து விலகுவதாக இந்தியாவின் அதானி குழுமம் அறிவிப்பு

2 months ago


இலங்கையில் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த காற்றலை மின்திட்டத்திலிருந்து விலகுவதாக இந்தியாவின் அதானி குழுமம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மீள்சக்தி காற்றாலை திட்டம் உட்பட இலங்கையில் முன்னெடுக்கவிருந்த திட்டங்களில் மேலும் ஈடுபடுவதிலிருந்து விலகும் பணிப்பாளர் சபையின் தீர்மானத்தை அதானி கிறீன் எனேர்ஜி கௌரவமான விதத்தில் அறிவித்துள்ளது என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

நாங்கள் இலங்கை குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம், இலங்கை அரசாங்கம் விரும்பினால் எதிர்கால ஒத்துழைப்புகளிற்கு தயாராக உள்ளோம் என மேலும் தெரிவித்துள்ளது

அண்மைய பதிவுகள்