கொழும்பு, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
8 months ago

கொழும்பு, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து முன்னணி சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சி.சி.ரிவி காட்சிகளின் படி, மாணவி கோபுரத்தின் 29வது மாடியில் இருந்து குதித்துள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின் படி இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்காணிப்பு தளத்தில் இருந்து ஒரு ஜோடி காலணிகள் மற்றும் பாடசாலை பை ஒன்றும் காணப்பட்டுள்ளது.
பலியானவர் 18 முதல் 20 வயதுடையவர் என நம்பப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
