சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட சீனக் குழு எதிர்வரும் 19 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம்

தேசிய இன விவகார ஆணையகத்துக்குப் பொறுப்பான சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட சீனக் குழு எதிர்வரும் 19 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
இதன்போது, இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான தலைப்புகளில் தூதுக்குழுவின் தலைவரான அமைச்சர் பான் யூ, இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார் என்று 11 வெளியுறவு அமைச்சக தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் அமைச்சரவையில் முக்கிய உறுப்பினரான பான் யூ சீனாவின் சிறுபான்மை விவகாரங்களை கையாளும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் முழு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
தமது ஒரு வார கால அதிகாரபூர்வ விஜயத்தில், சீன அமைச்சர் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு மற்றும் புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகார அமைச்சகத் தின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்த உள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
