மட்டக்களப்பு நகரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிள்ளைகளால் வரையப்பட்ட “நீதிக்கான பயணம்” எனும் தொனிப்பொருளில் கண்காட்சி.
7 months ago






மட்டக்களப்பு நகரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிள்ளைகளால் வரையப்பட்ட சித்திர கண்காட்சி “நீதிக்கான பயணம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்றுள்ளது.
குறித்த கண்காட்சியானது மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (29.08.2024) இடம்பெற்றது.
கடந்த கால யுத்தத்தின்போது காணாமல் போயுள்ள மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அக்காலச் சூழலில் தங்களுடைய மனங்களில் உட்கிடக்கைகளாக பதிந்த பல விடயங்களை சித்திரங்களாக வரைந்து இங்கு காட்சிப்படுத்தியுள்ளனர்.
இக்கண்காட்சியை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பார்வையிட்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
