காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்கள் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பணிமனை தெரிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்கள் - கருத்துகளின் மூலமாகக் கோரும் பொறுப்புக்கூறல் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பணிமனை தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள், நிலை மாறுகால நீதி நிலவரம் தொடர்பில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரின் பணிமனை பேரவைக்கு சமர்ப்பித்த அறிக்கையிலேயே இலங்கை தொடர்பில் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இலங்கை தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துகள் என்பவற்றின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்ட அவர்களின் கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றுள்ளது.
அத்துடன், இந்த முயற்சிகள் சிவில் சமூக அமைப்புகள் ஊடாக மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட தரப்பினருடனான பரந்துபட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நல்லிணக்க பொறிமுறை தொடர்பான ஆலோசனை செயலணியின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மீது கவனம் பாய்ச்சுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இத்தகைய இருவழி அணுகுமுறையானது கடந்தகால ஆயுத மோதல் மற்றும் வன்முறைகளின் தாக்கங்களை உரியவாறு கையாள்வதற்கு ஏற்றவாறு எதிர்கால வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கான அடித்தளத்தை இட்டுள்ளது -என்றும் தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
