
காஸாவில் உள்ள பாடசாலை வளாகத்தின் மீது இஸ்ரேல் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாகவும் 30 பேர் படுகாயமடைந்ததாகவும் காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காஸா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு ஒக்ரோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 1139 இஸ் ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸாமுனைக்கு ஹமாஸ் அமைப் பினர் கடத்திச் சென்றனர்.
இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணயக் கைதிகள் 105 பேரை மீட்டது.
மேலும், அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் பணயக் கைதிகள் 8 பேரை இஸ்ரேல் மீட்டுள்ளது.
இதனிடையே காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த போரில் சுமார் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், காஸாவில் உள்ள செய்டவுன் என்ற பகுதியில் உள்ள பாடசாலைகூடம் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் 30 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஒரு பழைய பாடசாலை வளாகத்துக்குள் செயல்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பினரின் கட் டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
