போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் முகவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று விமான நிலைய குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடவுச்சீட்டில் உள்ள புகைப்படம் அவருடையது அல்ல என்பதைக் கண்டறிந்ததால், அவர் தலைமை குடிவரவு அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட தொழில் நுட்பச் சோதனையில், மற்றொரு பெண்ணின் கடவுச்சீட்டில் இந்தப்பெண்ணின் தகவல்கள் பதிவு செய்து போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
