இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடம் இலங்கை பயணம்.-- இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
4 months ago

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்துக்குள் இலங்கைக்கு பயணம் செய்வார் என இலங் கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஆசிரியர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் நடத்திய சந்திப்பிலேயே இந்த தகவலை கூறினார்.
இந்த பயணத்திற்கான சரியான நேரத்தை கணிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றும் சந்தோஷ் ஜா குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்க, கடந்த டிசெம்பர் மாத நடுப்பகுதியில் புதுடில்லிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்தபோது, பிரதமர் மோடியை இலங்கை வருமாறு அழைப்பை விடுத்திருந்தார்.
அதன் பிரகாரம் மோடியின் இலங்கைப் பயணம் இடம்பெற உள்ளது.
பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டு மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கைக்கு பயணம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
