கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளுக்கு விற்கப்பட்ட பெறுமதியான காணிகள் மீண்டும் அதே உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்று கரைச்சிப் பிரதேச செயலர் ரி.முகுந்தன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் காலத்தில் அவர்களின் நிர்வாகங்களுக்கு மக்களால் காணிகள் விற்கப்பட்டன.
போர் நிறைவுற்ற பின் காணிகளை மீண்டும் உரிமையாளர்களால் கோரப்பட்டதற்கமைவாக பல பெறுமதியான காணிகள் உரிமை கோரியவர்களுக்கு வழங்கப்பட்டன.
அதேபோல, செஞ்சோலை காணியும் விடுதலைப்புலிகளுக்கு விற்பனை செய்யப்பட்டதே. ஆயினும் அங்கு வளர்ந்த பிள்ளைகள் வீடுகள், உறவுகள் இல்லாமல் அந்தக் காணியிலேயே கொட்டகைகளை அமைத்து வாழ்கின்றனர். உண்மையில் அவர்களின் நிலையும் கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
