யாழ்.கோப்பாயில் இயங்கி வந்த பாலியல் விடுதியொன்று முற்றுகையிடப்பட்டு ஒரு சிறுமி உட்பட மூவர் கைது
4 months ago

யாழ்ப்பாணம் கோப்பாய்ப் பகுதியில் இயங்கி வந்த பாலியல் விடுதியொன்று நேற்று முற்றுகையிடப்பட்டு ஒரு சிறுமி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த பாலியல் விடுதி முற்றுகையிடப்பட்டது.
விடுதியில் தங்கிநின்ற 17 வயதுடைய சிறுமியொருவர், 26 வயதுடைய யுவதியொருவர் மற்றும் 38 வயதுடைய ஆண் ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
