யாழ்.வருகை தந்த ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்



யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்கவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்த வேளை, வேலையற்ற பட்டதாரிகள் மாவட்ட செயலகத்துக்கு அருகில் தமக்கு வேலைவாய்ப்பு கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அமைதியாகப் போராட முடியும் எனவும், போராட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது எனவும் தெரிவித்த மன்று, தடை கோரிய மனுவை நிராகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
