
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் ஆறுமாதங்களிற்கு நீடித்துள்ளது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய பேரவை பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்காக பட்டியலில் இணைக்கப்பட்ட அமைப்புகள் குறித்து மீளாய்வு செய்துள்ளது என தெரிவித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு மேலும் ஆறுமாதங்களிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட அமைப்புகள் நபர்களின் நிதிகளை முடக்கலாம் என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அந்த அமைப்புகள் தனிநபர்களிற்கு நிதி வழங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
