சட்டவிரோதமாக இஸ்ரேல் சென்று வேலை செய்த நிலையில் இலங்கைக்கு திருப்பியவர்களுக்கு மீண்டும் இஸ்ரேலில் வேலை
5 months ago

சட்டவிரோதமான முறையில் இஸ்ரேல் சென்று அங்கு விவசாயத் துறையில் வேலை செய்துவந்த நிலையில், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இளைஞர்கள் குழுவொன்றுக்கு மீண்டும் இஸ்ரேலில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன்படி, இவர்களுக்கான விமான பயணச்சீட்டுகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக வளாகத்தில் அண்மையில் வழங்கப்பட்டது.
79 இளைஞர்களுக்கு இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அவர்கள் இஸ்ரேலில் 5 வருடங்களும் 3 மாதங்கள் சேவைக் காலத்தைக் கொண்டுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் குழுவினர் நேற்று (28) இஸ்ரேலுக்கு பயணிக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
