கடலரிப்பு காரணமாக பருத்தித்துறை கடற்கரை வீதியில் இரண்டு இடங்கள் தாழிறங்கி காணப்படுகின்றன.
4 months ago


கடலரிப்பு காரணமாக பருத்தித்துறை கடற்கரை வீதியில் இரண்டு இடங்கள் தாழிறங்கி காணப்படுகின்றன.
சீரற்ற காலநிலை காரணமாக தற்போது நாட்டில் பலத்த கன மழை பெய்து வரும் நிலையில், பருத்தித்துறை கடற்கரை வீதியில் துறைமுகத்துக்கு அருகாமையில் உள்ள பகுதியும், சாக்கோட்டை சவேரியார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு பகுதியும் தாழிறங்கி காணப்படுகின்றன.
இந்நிலையில், தொடர்ச்சியாக மழை பெய்யும் நிலையில் தாழிறங்கிய பகுதி அரிப்பு ஏற்பட்டு மேலும் வீதி இடிந்து விழும் நிலை காணப்படுகிறது.
இவ் வீதி ஊடான போக்குவரத்து தற்போதும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
