யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 25 ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு நாள் நிகழ்வுகள் நாளை மறுதினம்(24) சனிக்கிழமை பிற்பகல் முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீட கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளன.
யாழ்.பல்கலைக்கழகம் தனது 50ஆவது வருட நிறைவில் பொன்விழாக்காணும் சமகாலத்தில், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீடம் தனது வெள்ளிவிழாவைக் கொண்டாடுகிறது.
1974 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது, கலைப்பீடத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த வணிகத்துறை, 1999ஆம் ஆண்டு ஐந்தாவது தனிப்பீடமாக இயங்கத் தொடங்கியது.
இப்பீடம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இலங்கையில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் வணிக முகாமைத்துவக் கல்விக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது.
பீடத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறிய மாணவர்கள் இலங்கையில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியிலும் பல்வேறு பெரும் பதவிகளை வகித்து வருகின்றனர்.
இப்பீடமானது பல்வேறு பெரும் பதவிகளை வகிக்கும் மாணவர்களை உருவாக்கிய அதேவேளை சமூகத்திற்கு பல்வேறு பங்களிப்புகளையும் நல்கி வந்துள்ளது.
முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடம் காலத்தின் தேவை கருதி 1999 இலிருந்து வியாபார நிர்வாக மாணியில் கணக்கியல், நிதிமுகாமைத்துவம், மனிதவளம், சந்தைப்படுத்தல் துறைகளில் சிறப்பு பட்டத்தை வழங்கிவரும் அதேவேளை கடந்த ஆண்டிலிருந்து சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் சிறப்புப் பட்டத்துக்கான கற்கை நெறியையும் ஆரம்பித்துள்ளதுடன், வணிக மாணியில் கணக்கியலும் நிதியும் மற்றும் தகவல் தொழில் நுட்பம் என்பவற்றில் சிறப்புப் பட்டத்தினையும் வழங்கி வருகின்றது.
உள்வாரி மாணவர்களுக்கான இத்தகைய சிறப்புப் பட்டங்கள் மாத்திரமன்றி ஆயிரக்கணக்கான வெளிவாரி மாணவர்களுக்கு வணிகமாணி மற்றும் வியாபார முகாமைத்துவ மாணி பட்டங்களையும் வழங்கிய பெருமை இந்த பீடத்தையே சாரும்.
உள்வாரியாகப் பல்கலைக் கழக அனுமதி கிடைக்காதோர் தொழில் புரிந்துகொண்டே தமது கல்வியை வெளிவாரியாகத் தொடரக்கூடிய சந்தர்ப்பத்தை வழங்குகின்றமை ஒரு வரப்பிரசாதமாகும்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
