யாழ்ப்பாணத்தில் பதிவற்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும், 5 வாள்களும் நேற்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன என்று யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். நகர்ப் பகுதியில் விசேட ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளை மறித்துச் சோதனையிட்டனர்.
இதன்போது குறித்த மோட்டார் சைக்கிள் வாகனப் பதிவு இன்றி பயணித்தமை தெரியவந்தது.

இதையடுத்து சந்தேக நபரான நவாலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்தனர்.
இதன்போது சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது.

இதற்கமைய மேற்படி சந்தேகநபரின் வீட்டிலிருந்து ஐந்து வாள்களையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
