உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் ஆரம்பித்து 1,000 நாட்களைக் கடந்துள்ள நிலையில் இவ்வகையான ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 2022இல் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக உக்ரைன் நாட்டின் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய தாக்குதலை உக்ரைன் விமானப் படை உறுதி செய்துள்ளது. ஆனால், எந்தவிதமான ஆயுதங்கள் இருந்தன என்பதைப் பற்றி குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை.
ரஷ்யாவின் அஷ்ட்ராகன் பகுதியிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டது என்று உக்ரைன் விமானப் படை ரெலிகிராம் செயலியில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உக்ரைன் முதன் முறையாக அமெரிக்கா, பிரிட்டிஷ் ஏவுகணைகளை ரஷ்ய எல்லைக்குள் ஏவி தாக்குதல் நடத்தியிருந்தது.
இதற்குப் பதிலடியாக ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உக்ரைனுக்குள் ஏவியுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ. சி. பி. எம். ரக ஏவுகணைகள் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட வையாகும்.
இந்த ரக ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியுள்ளது இரு நாடுகள் இடையே போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
