
கவச வாகனத்தில் வந்த விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட பல மணிநேர சுற்றிவளைப்பின் பின்னர் குறித்த இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் தொடர்பில் சம்மாந்துறை மற்றும் அம்பாறை விசேட அதிரடிப் படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பிரதேசத்தில் இடம்பெற்றது.
இதன்போது சந்தேகத்துக்கிடமாக ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய 22 வயது இளைஞன் சம்மாந்துறை மற்றும் அம்பாறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மற்றும் சம்மாந்துறை விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைதானார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
