
வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வன்மைப் போட்டி கடந்த ஒரு வார காலமாக துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்தது.
இதில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவி மகிந்தன் மாதுரி 18 வயதுப் பிரிவு பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாகாண ரீதியில் முதலாவது இடத்தையும் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாகாண சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்து முதலாவது இடத்தை பெற்றதுடன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் முதலாவது இடத்தை பெற்று கல்லூ ரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவரின் பயிற்றுவிப்பாளராக ஜெக நாதலிங்கம் லக்ஷ்மன் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
