
தென்மராட்சி - வரணி விவசாயிகள் நேற்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்தோட இடமின்றி வயல் நிலங்களில் தேங்கி நிற்பதனால் தமது நெற்செய்கை முற்றுமுழுதாக அழிவடைந்துள்ளதாக தெரிவித்த விவசாயிகள், நேற்று வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டைமானாற்றில் நீர் கடலோடு கலக்கும் அணை பூட்டப்பட்டுள்ளதால், வெள்ள நீர் வழிந்தோட முடியாமல் நெற்பயிர்கள் அழிவடைந்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
