
தெற்காசிய மகளிர் உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணத் தொடரில் பங்கு பற்றும் இலங்கை பெண்கள் தேசிய அணியில் தெல்லிப்பழை மகாஜன கல்லூரியின் முன்னாள் உதைபந்தாட்ட வீராங்கனைகள் மூவர் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
பாஸ்கரன் சானு, சிவநேசன் தர்மிகா, சுரேந்திரன் கௌரி ஆகியோரே இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்தத் தொடர் நேபாளத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அணியில் இடம்பிடித்த 3 வீராங்கனைகளும் மகாஜன கல்லூரியில் கல்வி கற்ற போது பாடசாலை அணிகளுக்குத் தலைமை தாங்கியதுடன் தேசிய மட்டத்திலும் சிறப்பாக செயல் பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
