

கனடாவிலிருந்து நாடு கடத் தப்படவிருந்த மெய்வன்மை வீரர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தி னர் ஓராண்டு காலம் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஜமெய்க்காவைச் சேர்ந்த தமாரி லிண்டோ மற்றும் அவரது குடும்பத்தினரே இவ்வாறு நாடு கடத்தப்படவிருந்தனர்.
தாமரி யோர்க் பல்கலைக்கழக மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமாரி மிகச் சிறந்த தடைதாண்டி ஓட்டவீரர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
கடந்த மாதம் மொன்றியலில் நடைபெற்ற கனடிய தடகளப் போட்டி யில் 110 மீற்றர் தடை தாண்டி ஓட்டப் போட்டியில் தமாரி மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். அகதிக் கோரிக்கை விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் அவர்கள் நாடு கடத்தப்படவிருந்தனர்.
பியர்சன் விமான நிலையத்திலி ருந்து தமாரி மற்றும் குடும்பத்தினர் நாடு கடத்தப்படவிருந்தனர்.
எனினும் இறுதி நேரத்தில் ஓராண்டு காலம் தற்காலிக அடிப்படையில் கனடாவில் வதிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தாமரி மற்றும் குடும்பத்தினரை நாடு கடத்தும் தீர்மானத்தை மறு பரிசீலனை செய்யுமாறு சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர் கள் மகஜர் ஒன்றை அரசாங்கத்திடம் வழங்கியிருந்தனர்.
அனைத்து தரப்பினரும் தமக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி பாராட்டுவதாக தமாரி தெரிவித் துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
