கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றப்பட்ட இத்தாவில் மற்றும் முகமாலை பகுதிகள் விடுவிக்க நடவடிக்கை.
8 months ago






கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் மற்றும் முகமாலை கிராம அலுவலர் பிரிவுகளில் 1,142,563 சதுரமீற்றர் பகுதியில் உள்ள கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, அப்பகுதிகள் விரைவில் குறித்த நிறுவனத்தால் கையளிக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள பகுதிகளை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிறுவன உத்தியோகத்தர்கள், இத்தாவில், முகமாலை கிராம அலுவலர்கள், முகமாலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், மீள்குடியேற்ற உத்தியோகத்தர் மற்றும் அரச சார்பற்ற நிறுவன அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
