பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கின் சகல தேர்தல் மாவட்டங்களிலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனித்தே போட்டியிடும்

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கின் சகல தேர்தல் மாவட்டங்களிலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனித்தே போட்டியிடுவது என்று அந்தக் கட்சியின் அரசியல் குழு தீர் மானித்துள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு நேற்று முன்தினம் இரவு மெய்நிகர் வழியே கூடியது.
இந்தக் கூட்டத்தில், அம்பாறை, திருகோணமலையில் கூட்டாகப் போட்டியிட முன்வைக்கப்பட்ட ஆலோசனை தொடர்பில் கூடுகிறது.
இந்தக் கூட்டத்தில், ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் வேட்பாளர் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் வெற்றி வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை எடுத்து கட்சியின் உயர்பீடத்துக்கு சிபாரிசுகளை அந்தக் குழு அளிக்கும்.
தமிழ் அரசுக் கட்சியின் இந்தத் தெரிவுக் குழுவில் மாவை சேனாதிராசா, ப. சத்தியலிங்கம், எம். ஏ. சுமந்திரன், சி. சிறீதரன், இரா. சாணக்கியன், த. கலையரசன், ச. குகதாசன், சீ. வீ. கே. சிவஞானம், கி. துரைராஜசிங்கம், சேயோன், ரஞ்சினி ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
