இந்தியா செல்லும் இலங்கையருக்கு இலவச விஸா வழங்குமாறு இந்திய அரசிடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை

இந்தியா செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச விஸாவை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை - இந்தியா இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் இது ஏதுவாக அமையும் என்று வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில் இலங்கையின் இந்த கோரிக்கை தொடர்பில் இந்தியா ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மன், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளுக்கு இலவச விஸா வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்ரோபர் முதலாம் திகதியிலிருந்து 6 மாதங்களுக்கு இத்திட்டம் நடைமுறையிலுள்ளது.
மேற்கூறப்பட்ட நாடுகளோடு நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், டென்மார்க், போலந்து, கசகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், செக் குடியரசு, இதாலி, சுவிஸ்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ், இரான், சுவீடன், கட்டார், ஓமான், பஹ்ரைன் மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இந்த இலவச விஸா நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்நிலையிலேயே இலங்கை பிரஜைகளுக்கும் இலவச விஸா வழங்குவது குறித்து அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
