NPP கட்சியையும் ஜனாதிபதியின் பெயரையும் பயன்படுத்தி நிதி சேகரித்த மதகுரு உள்ளிட்ட இருவர் கைது

தேசிய மக்கள் சக்தியினையும், ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்காவின் பெயரையும் பயன்படுத்தி அடாவடியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்ட மதகுரு உள்ளிட்ட இருவர் நேற்றைய தினம் புதன்கிழமை (8) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாக தேசிய மக்கள் சக்தியினையும், ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்காவின் பெயரையும் பயன்படுத்தி தம்மை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என அறிமுகப்படுத்தி இருவரும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் நெல்லியடி நகரில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது நிதி கொடுக்க மறுத்தவர்களை ஜனாதிபதியின் ஒளிப்படத்தைக் காண்பித்து, அச்சுறுத்தி நிதியை வலுக்கட்டாயமாக பெற முற்பட்டபோது வர்த்தகர்களுக்கும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டோருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு கூடிய வர்த்தகர்கள் குறித்த நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டு நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அதனையடுத்து இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
நிதி சேகரிப்பில் ஈடுபட்ட மதபோதகர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் சிறுவர்களைப் பராமரிக்க இந் நிதி பயன்படுத்துவதாகவும் தெரிவித்து நிதியை சேகரித்துள்ளனர்.
ஆனாலும் அதற்கான பற்றுச் சீட்டுக்கள் எவற்றையும் வழங்கியிருக்கவில்லை.
நிதி கொடுக்க மறுத்தவர்களை “எலிக்காய்ச்சல் வந்து சாவாய்" என்றும், "அனுரவை நான் தான் யாழ்ப்பாணம் அழைத்து வந்தேன்" எனவும் "அனுர ஆட்களைப் பற்றித் தெரியும் தானே" எனவும் அச்சுறுத்தினர் என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
