
வவுனியா, ஓமந்தை - சேமமடுவில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் இன்று(08) தெரிவித்தனர்.
சேமமடு- இளமருதங்குளம் பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நாவற்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வநிரோயன் (வயது 46) என்ற குடும்பஸ்தர் மரணமடைந்திருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஓமந்தைப் பொலிஸார் வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் பயணித்த வாகனச் சாரதியை அன்றைய தினமே கைது செய்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரும், ஓமந்தை குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
வவுனியா, உக்குளாங்குளம், கூமாங்குளம், வேலங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 இளைஞர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.
மேலதிக விசாரணைகளின் பின் அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
