
வவுனியா, ஓமந்தை - சேமமடுவில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் இன்று(08) தெரிவித்தனர்.
சேமமடு- இளமருதங்குளம் பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நாவற்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வநிரோயன் (வயது 46) என்ற குடும்பஸ்தர் மரணமடைந்திருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஓமந்தைப் பொலிஸார் வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் பயணித்த வாகனச் சாரதியை அன்றைய தினமே கைது செய்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரும், ஓமந்தை குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
வவுனியா, உக்குளாங்குளம், கூமாங்குளம், வேலங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 இளைஞர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.
மேலதிக விசாரணைகளின் பின் அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
