இலங்கையில் பொருளாதாரம் நெருக்கடி நிலையில், மீண்டுவர சில இக்கட்டான முடிவுகளை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு
5 months ago

இலங்கையில் பொருளாதாரம் இன்னமும் மிகவும் நெருக்கடியான நிலையிலேயே காணப்படுகிறது.
இதிலிருந்து மீண்டுவர சில இக்கட்டான முடிவுகளை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சில் அதிகாரிகளிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
வீழ்ந்த இடத்தில் நாட்டை மீட்க அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும்.
குடும்பமாக உழைக்கும்போது குடும்ப முன்னேற்றத்துக்காக சில முடிவுகளை எடுக்க வேண்டும்.
அவ்வாறுதான் நாட்டுக்காக சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.
ஆனால், அந்த முடிவுகள் குடும்ப நலனுக்காகப் போன்று இவை நாட்டு நலனுக்காக எடுக்கப்பட வேண்டும். இதனை அனைவரும் புரிந்து கொள்வார்கள் - என்றார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
