மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படை படகு ஒன்று பயணிகள் கப்பல் மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
5 months ago




இந்தியா மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படை படகு ஒன்று பயணிகள் கப்பல் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 3 பேரும் அடங்குகின்றனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்படி கடற்படை கப்பல் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பயணிகள் கப்பலின் மீது மோதியதால், விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான பயணிகள் கப்பலில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
கடற்படைக் கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
