வடக்கு அபிவிருத்தி ஏனைய சமூகப் பிரச்சினைக்கு இலங்கை அரசுக்கு உதவிகளை வழங்க நடவடிக்கை.--சுவிற்ஸர்லாந்து தூதுவர் தெரிவிப்பு

2 months ago



வடக்கு அபிவிருத்தி, தேசிய ஒற்றுமை மற்றும் ஏனைய சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் சுவிற்ஸர்லாந்து தூதுவர் சிறிவோல்ட் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சுவிற்ஸர்லாந்து தூதுவர் சிறிவோல்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போதே தூதுவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டின் சொத்துக்களை மீட்பதற்கு எடுக்கவேண்டிய சர்வதேச நடவடிக்கைகள் குறித்து சுவிற்சர்லாந்து தூதுவர் இதன் போது வழிகாட்டுதல் வழங்கியதுடன் இதற்காக பூர்வாங்க வசதிகளை வழங்கத் தேவையாயின் எந்த நேரத்திலும் அதற்கு உதவி வழங்க அவர் உடன்பாடு தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழல் எதிர்ப்புத் திட்டத்துக்கு சுவிற்சர்லாந்தின் அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் வழங்குவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் அரசாங்க முன்னுரிமைத் திட்டங்களுக்கு சுவிற்சர்லாந்து அரசாங்கத்தின் தொழில்நுட்ப மற்றும் ஏனைய தேவையான உதவிகள் மற்றும் கிளீன் சிறிலங்கா திட்டத்துக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

வடக்கு அபிவிருத்தி, தேசிய ஒற்றுமை மற்றும் ஏனைய சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் சுவிற்சர்லாந்து தூதுவர் தெரிவித்தார்.

இதில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகேவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.


அண்மைய பதிவுகள்