
வவுனியா வடக்கு, நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் இன்று (27) காலை பாம்பு கடித்து இளைஞன் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
பட்டிக்குடியிருப்பில் வசிக்கும் 20 வயதுடைய 1 பிள்ளையின் தந்தையான குடும்பஸ்தரே பாம்பு கடிக்கு உள்ளாகிய நிலையில், நெடுங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது மரணமடைந்துள்ளர்.
தற்போது சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை அடுத்து பாம்பு மற்றும் விச பூச்சிகள் நீரில் அகப்பட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
