இலங்கையில் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருள்களின் ஏற்றுமதி வருமானம் நவம்பரில் 13.8 சதவீதம் அதிகரிப்பு
5 months ago

தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருள்களின் ஏற்றுமதி வருமானம் கடந்த நவம்பர் மாதத்தில் 13.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
இதன்படி, 70 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த வருடத்தின் முதல் 11 மாத காலப்பகுதியில் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருள்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 782 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி நடவடிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், சந்தையில் தேங்காய்க்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
