இந்தியாவில் முஸ்லிம்கள் துயரம் அனுபவிப்பதாக வலைத்தளத்தில் பதிவிட்ட ஈரான் ஐயதுல்லா அலி கமேனிக்கு இந்தியா கண்டனம்.

இந்தியாவில் முஸ்லிம்கள் துயரம் அனுபவிப்பதாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்ட ஈரான் உயர்தலைவர் ஐயதுல்லா அலி கமேனிக்கு இந்தியா கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஈரான் உயர் தலைவரும் இஸ்லாமிய மதகுருவுமான ஐய துல்லா அலி கமேனி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இஸ்லாமிய சமுதாயத்தின் தனித்துவ அடையாளத்தை அலட்சியப்படுத்த எதிரிகள் முயற்சித்து வருகின்றனர்.
மியன்மார், காஸா, இந்தியா உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துயரங்களை மறந்துவிட்டால் நாம் நம்மை முஸ்லிம்களாகவே கருதமுடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஐயதுல்லா அலி கமேனியின் இந்த கருத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் சிறுபான்மையினர் குறித்து ஈரானின் உயர்தலைவர் தெரிவித்த கருத்துகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இவை தவறான தகவல்கள் மட் டுமின்றி ஏற்றுக்கொள்ள முடியா தவையும் ஆகும்.
சிறுபான்மையினர் பற்றி கருத்து தெரிவிக்கும் நாடுகள் மற்றவர்களைப் பற்றி எந்த அவதானிப்பும் செய்வதற்கு முன் தங்கள் சொந்த வரலாற்றை பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
