

ஜப்பானின் தொலைதூர தீவான இசு தீவுகளுக்கு அருகே 5. 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை சிறியளவில் சுனாமி தாக்கியது.
பூகம்பம் ஏற்பட்டு 40 நிமிடங்களுக்கு பின்பு 50 சென்ரி மீற்றர் (1.6 அடி) உயரம் கொண்ட சுனாமி அலை இசு தீவுகளை அடைந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அங்கு பூகம்பம் மற்றும் சுனாமியால் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை.
கடல் மட்டத்திலிருந்து ஒரு மீற்றர் வரை அலைகள் உயரும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் வானிலை அதிகாரிகள், சுனாமி எச்சரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
