யாழ்.காங்கேசன்துறை – நாகப்பட்டினம் துறைமுகம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை இன்று ஆரம்பம்
1 month ago









யாழ்.காங்கேசன்துறை – நாகப்பட்டினம் துறைமுகம் இடையிலான இந்திய இலங்கை பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது இன்று (22) மீண்டும் ஆரம்பமானது.
நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பலானது இன்று மதியம் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
83 பயணிகள் குறித்த கப்பலில் அங்கிருந்து வருகை தந்திருந்த நிலையில், பிற்பகல் 1.30 அளவில் காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டனத்திற்கு, பயணத்தை ஆரம்பித்த கப்பலில் 83 பேர் பயணித்திருந்தனர்.
இந்த பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது செவ்வாய்க்கிழமை தவிர்ந்து வாரத்தின் 6 நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
