கிளிநொச்சியில் இருந்து வவுனியாவுக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாகப் பெண் உட்பட இருவர் கைது
3 months ago


கிளிநொச்சியில் இருந்து வவுனியாவுக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாகப் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது கிளிநொச்சியில் இருந்து வவுனியாவுக்கு வருகை தந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருந்து 700 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதில் பயணித்த 36 வயதுடைய பெண் ஒருவரும், அவரது சகோதரர் எனக் கூறப்படும் 30 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து இரண்டு இலட்சத்து 72 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஓமந்தைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
