
பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத ஐக்கிய தேசியக் கட்சியின் முன் னாள் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரனுக்கு 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பாராளு மன்ற உறுப்பினர்களுக்கு விசேட அபிவிருத்தி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான த. சித்தார்த்தன், சி. சிறீதரன், எம். ஏ. சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ. கஜேந்திரன் ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாத னுக்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரான விஜயகலா மகேஸ்வரன் சமர்ப்பித்த 19 கோடி ரூபாய் பெறுமதியான திட் டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட் டுள்ளது.
இதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர் க. விக்னேஸ்வரனுக்கு இதுவரை விசேட நிதி ஒதுக்கப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக் கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
